Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரே அரசியல் உள்நோக்கத்தோட இப்படி பண்ணலாமா? – எஸ்.பி.வேலுமணிக்கு 10 ரூபாய் அபராதம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (14:49 IST)
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு உள்நோக்கமுடையது என கூறிய நீதிமன்றம் அவருக்கு 10 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட தடைக்கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிடாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் தனிப்பட்ட அரசியல் உள்நோக்கத்தின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்ததுடன் 10 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments