Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் தள்ளிவிடுவேன்: ஜெ. மகன் என கூறிய இளைஞருக்கு நீதிபதி எச்சரிக்கை!!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (15:21 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறிக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 


 
 
ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன், தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், ஜெயலலிதாவை தனது தாயாக அறிவிக்கக்கோரியும், ஜெ.வை சசிகலா கொலை செய்ததாகவும், அவர்களிடம் தனக்கு உயிர்பாதுகாப்பு வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார். 
 
மேலும், ஜெயலலிதாவின் வாரிசுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முறைப்படி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த மனு, நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என தெளிவாக கூறிய நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நீதிமன்றத்தை வீணடித்ததற்காக சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்றும் கிருஷ்ணமூர்த்தியை நீதிபதி மகாதேவன் எச்சரித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments