Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (14:19 IST)
பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சமீபகாலமாக, தமிழக அரசு விழாக்களில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கு பெறும் கூட்டங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைப்பது அதிகரித்து வருகிறது.
 
வருகிற செப்.30ம் தேதி நடைபெறும் எடப்பாடி தலைமையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைக்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர்.
 
இந்நிலையில், இதற்கு தடை விதிக்குமாறு சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வருபவருமான நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்வதற்கு தடை விதித்தார். மேலும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுக்கும் வரை பள்ளிக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
 
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments