Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காருக்குள் காதல் ஜோடி: மரணத்தின் மர்மம் விலகல்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (13:34 IST)
சேலத்தில் காதல் ஜோடி ஒன்று காருக்குல் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் போலீஸார் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். 
 
சேலம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். தந்தையுடன் வெள்ளி வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்த இவர்  சம்பவ தினத்தன்று வீடு திரும்பாததால் குடும்பத்தார் அவனை தேடியுள்ளனர். குடும்பத்தாரின் தேடல் பலன் அளிக்காத நிலையில் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.  
 
இந்த புகாரை ஏற்ற போலீஸார் சுரேஷ் தேடிய போது, கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  அந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 
 
இதன் பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணியில், சுரேஷ் - ஜோதிகா காதலித்து வந்ததாகவும். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என யூகித்துள்ளனர். இதற்கு ஏற்ப காருக்குள் சாக்லெட் கவர்களும் கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments