Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சாராய வழக்கு..! தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது..!!

Senthil Velan
ஞாயிறு, 23 ஜூன் 2024 (12:31 IST)
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிவகுமார் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
 
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 
 
இந்த பலகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
 
இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோரும், மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிவகுமார், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ: பூமிக்கு திரும்பும் ஏவுகணை சோதனை..! ஹாட்ரிக் வெற்றி என இஸ்ரோ பெருமிதம்..!!
 
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி..! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி.!!

தலைமறைவு குற்றவாளி..! விஜய் மல்லையாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிபிஐ நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments