Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி தங்க காசை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:22 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் போலி தங்க காசை கொடுத்து மக்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் 36வது வார்டில் காங்கிரஸ், அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் 2 சுயேட்சை வேட்பாளர்களும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இந்த வார்டு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவை சேர்ந்த மணிமேகலை என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மணிமேகலை வாக்காளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயங்களை வழக்கியதாக கூறப்படுகிறது. அவற்றை மக்கள் விற்க சென்றபோது அது போலி என தெரிய வந்துள்ளது. போலி தங்க நாணயங்களை கொடுத்தது பற்றி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வார்டில் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments