Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரசவம் ஆன பெண்ணுக்கு கொரோனா...

பிரசவம் ஆன பெண்ணுக்கு கொரோனா...
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:27 IST)
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ஒர் பெண் தேனி மாவட்டத்துக்கு திருமணம் ஆகிச் சென்றார். பின்னர் பிரசவத்திற்காக வால்பாறைக்கு வந்துள்ளார். தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அதே மருத்துவமனையில் பிரவசவத்திற்காக அழைத்து வரப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அப்போது மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், வால்பாறையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை பெண்ணின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் அறிகுறியே இல்லாமல் 186 பேருக்குக் கொரோனா! ஊரடங்கை விலக்க அரவிந்த கெஜ்ரிவால் மறுப்பு!