Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறு மாதங்களில் முடிவுக்கு வருகிறது கொரோனா? – தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் தகவல்!

ஆறு மாதங்களில் முடிவுக்கு வருகிறது கொரோனா? – தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் தகவல்!
, வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:04 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 மாதங்களில் முடிவுக்கு வரத்தொடங்கும் என தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது பேசிய தேசிய நோய் தடுப்புத்துறை இயக்குனர் சுர்ஜீத் சிங் தற்போது இந்தியாவில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேராவது நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள். கொரோனா சாதாரண நோய் தொற்றுகள் போல மாறி சிகிச்சையில் குணமாக்கும் நோயாக மாறுவதுதான் பெருந்தொற்று முடிவதற்கான தொடக்க நிலை. இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் பெருந்தொற்று முடிவுக்கு வரத்தொடங்கும் என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 30 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!