Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான இருவர் தப்பியோட்டம்: குமரியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:17 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் இன்றும்கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சிலருக்கு நோய் தடுப்பு மையத்தில் இருந்து தப்பித்து செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு வயதானவர்கள் திடீரென தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 75 வயது மூதாட்டி மற்றும் 55 வயதான நபர் ஆகிய இருவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இருவரையும் காணவில்லை
 
இருவரும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் அவர்களை தேடும் பணியில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றால் அவர்களால் மேலும் பலருக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments