Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது…. இன்று 6,988 பேருக்கு கொரோனா !

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (18:07 IST)
தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும்  1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 92,206 லிருந்து 93,537 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று குணமடைந்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments