Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 18 மே 2020 (12:41 IST)
எம்ஜிஆர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்து பிசியாக உள்ள மார்க்கெட்டுகளில் ஒன்று எம்ஜிஆர் நகர் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்கறி வாங்கவும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்யவும் வருவதுண்டு.
 
இந்த நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகமானது. இதனை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் அதிரடியாக மூடப்பட்டது
 
இந்த நிலையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த மார்க்கெட்டில் கடை போட்டிருக்கும் 147 வியாபார்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நகர் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோயம்பேடு மார்க்கெட் போலவே எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் அதிகமானோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டும் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments