தேர்வு வேணாம்னு சொல்லல.. இப்போ வேணாம்னுதான் சொல்றேன்! – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Webdunia
திங்கள், 18 மே 2020 (12:40 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக ஜூன் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் தேதியில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”மே 31 வரை ஊரடங்கு தொடரும் நிலையில் ஜூன் முதல் நாளே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் பிடிவாதத்தையும், மாணவர்கள் மேல் அக்கைறையில்லாததையும் காட்டுக்கிறது. தமிழகத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. குழந்தைகளுமே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களுக்கு தொற்று ஏற்படாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொதுத்தேர்வு நடத்துவதில் உள்ள பல சிக்கல்களை விளக்கியுள்ள அவர் “பொதுத்தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. கொரோனா அபாயம் உள்ள இந்த சூழலில் அவசரமாக ஏன் நடத்த வேண்டும்? இயல்பு நிலை திரும்பியதும் உரிய கால அவகாசத்துடன் தேர்வை நடத்துங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments