Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு வீடாக குக்கர் வழங்கியது யார்? பறக்கும் படை வந்ததும் தெறித்து ஓட்டம்..!

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:39 IST)
தமிழகத்தில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலமான புதுவையிலும் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் வீடு வீடாக சென்று நள்ளிரவில் குக்கர் வழங்கியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் அப்போது பறக்கும் படையினர் வந்ததும் அவர்கள் தெறித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.

புதுவையில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியில் புதுவை முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் திமுக அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்பது தெரிந்தது . பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுகின்றனர்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு குறிப்பிட்ட கட்சியினர் புதுவையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் லாரியில் குக்கரை எடுத்து வந்து வீடு வீடாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து பறக்கும் படையினருக்கு தகவல் அனுப்ப சம்பவம் இடத்திற்கு பறக்கும் படையினர் ஒரு சில நிமிடங்களில் வந்து விட்டனர்

இதனை அடுத்து குக்கரோடு உள்ள லாரியுடன் தப்பித்து சென்று விட்டதாகவும் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் புதுவையில்  பொதுமக்களுக்கு குக்கர் பரிசுகளை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments