Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகை.. நெல்லையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:36 IST)
பிரதமர் மோடி கடந்த சில நாட்களாகவே தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழகம் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சில முறை தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி இன்று மீண்டும் வர இருப்பதாகவும் அவர் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக நெல்லையில் இன்று மாலை நடைபெற இருக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார் என்றும் அதேபோல் அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரதமர் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments