Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலகுக... கிருஷ்ணகிரி ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை!

ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலகுக... கிருஷ்ணகிரி ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை!
, வியாழன், 3 மார்ச் 2022 (14:37 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி அமமுக-வை சேர்ந்த காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் என்பவர் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
 
மேலும் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுக்ரேன் போர் நீட் தேர்வை விலக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்த்துகிறது - மு.க.ஸ்டாலின்