Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (12:14 IST)
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சால், பெண்களின் வாக்குகளை திமுக இழக்கலாம் என்றும், அவர் அமைச்சராக தொடர்ந்தால் திமுக ஆட்சியை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் பொன்முடி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். பேருந்தில் இலவச பயணம் செய்யும் பெண்களை, ஓசி பேருந்தில் தானே செல்கிறாய் என்று கேட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பது தெரிந்தது.
 
அதேபோல், தற்போது இந்து மக்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எடுத்து, அவரது கட்சிப்பதவி மட்டும் பறிக்கப்பட்டது. 
 
இதனால், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணம் மற்றும் பல்வேறு சலுகைகள் அனைத்தும், பெண்களுக்கு எதிராக அமைச்சர் பொன்முடி பேசிய கருத்தால், திமுக பெண்களின் வாக்குகளை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தான் ஒரே வழி என ஆட்சியாளர்களுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதனை அடுத்து, கட்சி பதவியிலிருந்து நீக்கிய  பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments