பகலில் வெயில்.. நள்ளிரவில் கனமழை.. தொடர்ந்து 3வது நாளாக பலத்த மழை..!

Siva
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (08:20 IST)
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பகலில் வெயில் மற்றும் நள்ளிரவில் கனமழை பெய்து வருவதால், தட்பவெட்ட சூழ்நிலை மாறி மாறி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் நன்றாக அடித்தாலும், இரவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், எனவே இரவில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், விடிய விடிய மாநகராட்சி ஊழியர்கள் மீட்டும் பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இரவில் பலத்த மழை பெய்தது. 
தொடர்ந்து மூன்றாவது நாளாக பகலில் வெயில் மற்றும் நள்ளிரவில் மழை என்ற சூழல் சென்னையில் நிலவி வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக இன்னும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், இந்த மாதம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலினை தலைவராக்க வேண்டும்!.. சிவசேனா கோரிக்கை!...

டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

ஒரு எம்.பி சீட் வேணும்!.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தேமுதிக!...

72 சீட் தருகிறேன்.. காங்கிரஸ் கட்சிக்கு மெகா வாய்ப்பு கொடுத்த விஜய்.. கூட்டணி உறுதியா?

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைக்க ஸ்டாலின் எடுக்கும் கடைசி முயற்சி.. சோனியாவிடம் நேரடி பேச்சுவார்த்தை?

அடுத்த கட்டுரையில்
Show comments