Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம்.. 2 பாலங்கள் உடைந்ததால் மக்கள் மத்தியில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (07:57 IST)
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டு பாலங்கள் உடைந்ததுடன், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை தொடங்கியது. தொடர்ந்து பகலிலும் இரவிலும் மழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருவிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கால் தென்காசி மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் உடைந்தன. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோவிலை தாண்டி கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானவுடன் வைரலாகி வருகின்றன. வெள்ளம் மிக மோசமான நிலையில் உள்ளதால், அருவி அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments