தினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்
Publish Date: Thu, 01 Nov 2018 (14:28 IST)
Updated Date: Thu, 01 Nov 2018 (15:05 IST)
இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையேயான போட்டியாக மக்கள் பார்ப்பதாக எம்.எல்.ஏ.கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.
வாலாஜா பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் கூறியதாவது:
தினகரன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தினகரன் தன்னிடம் கூறியதாக கருணாஸ் தெரிவித்தார்.
மேலும், மக்கள் வரும் இடைத்தேர்தலை அ.ம.மு.க துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே மக்கள் பார்ப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நான் எனது முடிவை திடமாக அறிவிப்பேன் என்றும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்