Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்- புஸ்ஸி ஆனந்த்

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:25 IST)
சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில்  கடந்த சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த வழக்கறிஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் சொல்லிற்கிணங்க, முதன் முறையாக சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து நேற்று சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,  சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  தளபதி விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில், கேரளா மாநில அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய #கேரளா நிர்வாகிகளுக்கு #கேடயம்  வழங்கப்பட்டது.!

அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments