Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவை பிரிக்க சதிகள் நடக்கும்: எச்சரித்த விஜயசாந்தி

Advertiesment
அதிமுக
, சனி, 17 டிசம்பர் 2016 (17:07 IST)
டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


 
 
iஇதனை தொடர்ந்து மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மற்று பொதுமக்கள் மெரினா கடற்கையில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று பிற்பகல் மெரினா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு அதிமுக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, மேலும், அதிமுக கட்சியைப் பிரிக்க சதிகள் நடக்கும் எனவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ஈஷா மையம் போலி ஆவணங்கள் மூலம் நில ஆக்கிரமிப்பு’ - போராட்ட குழு ஆதாரம்