Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கூட்டணி; நெல்லையில் தனித்தனி..! – திமுக, காங். கூட்டணி!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (13:48 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரையில் இடங்கள் ஒதுக்குவது குறித்து மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேசமயம் திருநெல்வேலியில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படாததால் , திருநெல்வேலியில் உள்ள 3 நகராட்சிகள், 13 பேரூராட்சிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபோல பல மாவட்டங்களிலும் கூட்டணியா? தனித்தனியா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments