Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் நீட் பிரச்சினையால் சர்ச்சை! – காங்கிரஸ் வெளியேற்றம்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (12:20 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்த விவாதத்தில் வாக்குவாதம் எழுந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து நடந்த விவாதத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக மேல் பழிபோடுவதாக பேசப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நீட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரத்தின் மனைவி நீதிமன்றத்தில் வாதாடியதாக அதிமுக குற்றம் சாட்டியது.

அதிமுக உறுப்பினர் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து மேலும் சூடான விவாதங்கள் பேரவையில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments