Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தினத்தில் ஆளுனரின் தேநீர் விருந்து.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு..!

Siva
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:24 IST)
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் கவர்னர் தனது மாளிகையில் தேநீர் விருந்து வைக்கும் நிலையில் இந்த ஆண்டும் அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் சுதந்திர தின கொடியேற்றத்துக்கு பிறகு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
 
தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில நலனுக்கும் மாநில அரசுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினர் தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் இதுவரை தேநீர் வசதி புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பாக திமுக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments