Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 தொகுதிகளை குறி வைக்கும் காங்கிரஸ்.. 5 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்கிறது திமுக?

Siva
புதன், 10 ஜனவரி 2024 (07:41 IST)
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 10 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பின்னர் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் எனவே 18 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருவது ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் கூறிய போது ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு அளித்துள்ளது. எனவே திமுகவுடன் 18 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால்  திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஒரு சில கட்சிகள் கூடுதலாக வர இருப்பதால்  காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments