Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் எத்தனை அனிதாக்களை நீட் தேர்வு பலி வாங்குமோ? - அல்போன்ஸ் உருக்கம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:48 IST)
நீட் தேர்வால் தனது மருத்துவர் படிப்பு கனவு கலைந்ததால் அரியலூரை சேர்ந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.


 

 
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தார். இவரது மருந்துவ கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும். இந்நிலையில், மத்திய அரசு நீட் தேவு மூலம் மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்கப்படும் என அறிவித்தது. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட் ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே. 
 
பின்னர் நீட் தேர்விற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராக அவர் இணைத்துக்கொண்டார். இந்நிலையில்தான், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.


 

 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் “ நீட் தேர்வுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். இன்னும் எத்தனை அனிதாக்களை இந்த நீட் தேர்வு பலி வாங்குமோ என்பதை நினைக்கும் போது என் மனம் பதைபதைக்கிறது” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments