Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க.வையும் நாங்கள் தான் வளர்க்கிறோம்: சீமான்

Mahendran
வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:41 IST)
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் 3000 பேர் இன்று திமுகவில் இணைந்த நிலையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் திமுகவையும்  சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சீமான் கூறிய போது ’கட்சியில் சேர்ந்த பிறகு தான் எத்தனை பேர் சேர்ந்து இருக்கிறார்கள் என்று எண்ணிக்கை தெரியும், ஆனால் கட்சியில் சேர்வதற்கு முன்பே 3,000 பேர் கூறுவது எப்படி என்று புரியவில்லை என்று தெரிவித்தார்.

ஆயினும் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள், மகிழ்ச்சி என்றும் திமுகவையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் கூறினார்.

பெரியாரை எதிர்த்து தான் அறிஞர் அண்ணா விலகி வந்து திமுகவை தொடங்கினார் என்றும் ஆனால் தற்போது திமுக பெரியாருக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் ஏ டீம் ஆக திமுக இருப்பதால்தான் நான் பி டீம் ஆகிவிட்டேன் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments