Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்தியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு! சீமானுக்கு எதிர்ப்பு, உருவ பொம்மை எரிப்பு!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (11:49 IST)
வட இந்தியர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமானுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியர் சமூக மக்கள் தூய்மை பணிகளை செய்வதற்காக ஆந்திராவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல ஈரோடு பழைய பூந்துறை சாலையில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழ் புலிகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தொடர்ந்து ஆங்காங்கே பரபரப்பு நிலவி வரும் நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் சீமான் வட மாநில இளைஞர்கள் குறித்து விரோதம் ஏற்படுத்தும் நோக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாகவும், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments