தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:00 IST)
தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்!
தமிழக பள்ளிகளில் தற்போது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இருக்கும் நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
கம்ப்யூட்டர் அறிவை ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நோக்கத்தில் ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடங்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன 
 
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் இந்த ஆண்டே இந்த பாடங்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொண்டால் கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments