Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:30 IST)
தமிழகத்தில், 11,88, 043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ALSO READ: 2024 தேர்தல்தான் பாஜகவிற்கு கடைசித் தேர்தல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24x7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன.

இந்த நிலையில்,மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில்,'' 11,88,043 புகார்களில் 99%
புகார்களுக்கு தீர்வுகள்
காணப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் தளபதி @mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
24x7 செயல்படும் மின்னகம் - மின்
நுகர்வோர் சேவை மையத்தின்
செயற்பாடுகள் குறித்து இன்று
அதிகாரிகளுடன் ஆய்வு
மேற்கொண்ட போது.. ''எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments