Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்திற்கு போன ரசிகர் உயிரிழப்பு! நடிகர் அஜித் மீது புகார்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:38 IST)
துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அஜித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் துணிவு படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் அங்கு சென்ற டேங்கர் லாரி மீது ஏறி ஆடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் பார்க்க சென்ற இளைஞர் பரத் மரணத்திற்கு நடிகர் அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என புகாரளித்துள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments