Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார், யார் தனித் தொகுதியில் போட்டியிடலாம்?; சாதி சான்றிதழ் அவசியம்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:21 IST)
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடைபெற இருக்கிறது.
 

 
திங்கட்கிழமை முதல் (26.09.16) தொடங்கிய உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுவுள்ளது.
 
அக்டோபர் 6ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
 
தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்புமனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட (தனித்) தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்பவர்கள், அத்துடன் சாதி சான்றிதழ் இணைப்பது அவசியம் ஆகும்.
 
கலப்புத் திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட  பிறப்பால் எஸ்சி எஸ்டி பிரிவினை சாராதவர்கள் எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை.
 
ஆனால் மதம் மாறிய, பிறப்பால் எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்தவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிடுவதில் பிரச்சினையுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments