திமுக - மார்க்சிஸ்ட் இழுபறியில் வி(மு)டிவு வந்தது!!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (08:41 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. 

 
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 
 
திமுக தரப்பில் இருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியதாகவும் ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகள் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கூட்டணி இழுபறியில் இருந்தது. 
 
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கையெழுத்துயிட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments