Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.யில் காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலை

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (08:58 IST)
உத்திர பிரதேசத்தில் கடந்த மாதம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த மாதம் உத்திர் பிரதேச மாநிலம், படாவுன் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை  மர்ம நபர்கள் உடைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை வைத்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதனையடுத்து படாவுன் நகரில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது. நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு தற்போது காவி நிற வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments