Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்.4-ம் தேதி முதல் கல்லூரிகள் துவக்கம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. 
 
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவுபெற்ற நிலையில் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்துவிட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments