கல்லூரி மாணவியுடன் திருமணமான பேராசிரியர் தலைமறைவு.. போலீசார் தேடுதல் வேட்டை..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (08:21 IST)
திருமணமான பேராசிரியருடன் கல்லூரி மாணவி ஒருவர் தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பி.எட் படிக்கும் மாணவி ஒருவருக்கும் அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த பேராசிரியர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற போதிலும் கல்லூரி மாணவி அவரை காதலித்து உள்ளார் என்பதும் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திருமணம் ஆன பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவரும் திடீரென தலைமறைவாகியுள்ளதால் கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தலைமறைவாகியுள்ள பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவரும் கோவையில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசார் கோவை விரைந்துள்ளதாகவும் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் தென்காசி அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
திருமணம் ஆன பேராசிரியருடன் கல்லூரி மாணவி ஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments