Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் 1.70 லட்சம் கன அடி நீர்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (08:05 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேட்டூர் அணையில் ஒருசில அடிகள் மட்டுமே தண்ணீர் இருந்ததால் விவசாயத்திற்கு கூட தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்தது. அதேபோல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குக் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 1.60 லட்சம் கனஅடியாக இருப்பதாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறி வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோரமாக உள்ள 16 கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments