Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் 1.70 லட்சம் கன அடி நீர்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (08:05 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேட்டூர் அணையில் ஒருசில அடிகள் மட்டுமே தண்ணீர் இருந்ததால் விவசாயத்திற்கு கூட தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால் கர்நாடக மாநிலத்தில் திடீரென பெய்த கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்தது. அதேபோல் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குக் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 1.60 லட்சம் கனஅடியாக இருப்பதாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 1.70 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறி வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோரமாக உள்ள 16 கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments