Publish Date: Mon, 07 Jun 2021 (10:26 IST)
Updated Date: Mon, 07 Jun 2021 (10:28 IST)
கோவையில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு சரியான உணவு கூட கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் பயிற்சி மருத்துவர்களும் சிகிச்சை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சி மருத்துவர்களுக்கு தங்குமிடம், சரியான உணவு போன்றவை வழங்கப்படவில்லை என கூறி தேவையா அத்தியாவசிய வசதிகளை அளிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.