Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய், மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்தோடு தற்கொலை செய்த ஆசிரியர்:

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (23:00 IST)
கோவை அருகே உள்ள கருமத்தப்பட்டி என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்த கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கருமத்தப்பட்டி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் இன்று திடீரென  தாய் புவனேஸ்வரி, மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை பகுதியை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை குறித்து ஆசிரியர் அந்தோணி எந்தவித கடிதமும் எழுதி வைக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments