Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி திறந்தும் வராத மாணவர்கள்! வேலைக்கு செல்கின்றனரா? – அதிகாரிகள் சந்தேகம்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (10:25 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னும் பல பகுதிகளில் மாணவர்கள் வருகை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதலாக பள்ளிகள் சரிவர செயல்பட முடியாத நிலை உள்ளது. சுழற்சி முறை வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் என நடந்து வந்த நிலையில் தற்போது பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வருகை பல பகுதிகளில் குறைவாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்தால் அதுகுறித்து கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் பல பள்ளிகளில் 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேற்பார்வையிட மாணவர்களின் வீட்டிற்கு சென்றால் அங்கு மாணவர்கள் அதிகபட்சம் இருப்பதில்லை என்றும், இதனால் மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளி கல்வி இடைநிற்றலை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments