Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள்; கடும் நடவடிக்கை வேண்டாம் - உயர்நீதிமன்றம்

Mahendran
வெள்ளி, 29 மார்ச் 2024 (16:54 IST)
கோவையில்  பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடும் நடவடிக்கை வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்த வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கோவையில் பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்றதாக பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனியார் பள்ளி தலைமையாசிரியை புகழ் வடிவு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க கோவை போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஏப்ரல் 3ம் தேதி வரை பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments