Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வண்டி நிக்குதே..! வளைந்து நெளிந்த சாலை! – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

Road
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (11:01 IST)
கோவை மாவட்டத்தில் சாலை போடும் பணியின்போது வாகனம் நின்ற இடங்களை தவிர்த்து சாலையை வளைத்து, நெளித்து போட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை அமைக்கப்படும் பணிகளின்போது நடைபெறும் சம்பவங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது.

அப்பகுதியில் பழுதான மின் மயான வாகனம் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. சாலை அமையும் இடத்தில் இருந்த அந்த வாகனத்தை அப்புறப்படுத்தாமல் அது நின்ற இடத்தை விடுத்து சாலையை வளைத்து, நெளித்து அமைத்துள்ளனர்.


முன்னதாக சேலத்தில் இதுபோலவே சாலைகள் அமைத்தபோது அங்கிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தாமல் அவற்றின் சக்கரங்கள் புதையும்படி சாலையை அமைத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. முறையாக வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு சரியாக, நேர்த்தியாக சாலைகள் அமைக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம்: பள்ளிக்கல்வித்துறை