Publish Date: Wed, 03 Jul 2024 (18:13 IST)
Updated Date: Wed, 03 Jul 2024 (20:59 IST)
மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் ஜூலை இரண்டாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி ,மதுவை கீழே ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் இதில் சிறப்புரையாற்றிய பழனி ஃபாருக் மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளர், அக்பர் அவர்கள் மமக மாநில பிரதிநிதி, மமக மாவட்ட தலைவர் சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்பு ரஹ்மான், மமக மாவட்ட துணை தலைவர் டிஎம்எஸ் அப்பாஸ், ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.