Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக கவசம் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம்! – கோவை மாநகராட்சி கறார்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:54 IST)
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி தொடங்கியுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு பொறுத்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை அறிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோயம்புத்தூரில் கொரோனா பரவலுக்கு எதிராக மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கோயம்புத்தூரில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் கட்டாயம் ரூ.500 அபராதம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments