கூட்டுறவு சங்கம் : தலைவராக செயல்பட ஓபிஎஸ்., தம்பிக்கு இடைக்கால தடை

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:56 IST)
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணைமுதல்வருமான ஒ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா செயல்பட்டு வந்த நிலையில், அவர் தலைவராக செயல்பட, இன்று, நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
எந்தவிதமான முன்னறிவிப்புகளும் இல்லாமல் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், ஓ. ராஜா மற்றும் 16 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, அமாவாசை என்பவர்,  மதுரை, உயர் நீதிமன்றத்தின் கிளையில் வழக்கு தொடுத்தார்.
 
இதனையடுத்து, இன்று,  மதுரை உயர் நீதிமன்றகிளை நீதிபதி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள பால் உற்பத்தி, பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் ஓ.ராஜா உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, இவ்வழக்கை வரும்  அக்., 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க  தலைவராக ஓ.ராஜா மற்றும் இடைக்கால நிர்வாகக் குழுவும் செயல்பட தடை விதித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments