மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாறும் பறக்கும் ரயில் நிலையங்கள்: விரைவில் டெண்டர்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (10:56 IST)
மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் விரைவில் பறக்கும் ரயில் நிலையங்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் கோரப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் ஒருசில பறக்கும் ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments