Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. நினைவிடம் கட்டும் பணி : சி.எம்.டி.ஏ அனுமதி

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (15:33 IST)
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது.

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.  அதன் பின் ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
 
எனவே, இந்த பணிக்கு அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டது. அதில், குறைந்த விலைக்கு டெண்டர் கோரிய ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஜெ. நினைவிடம் குறித்த வரைபடம் மற்றும் ஸ்டெக்சுரல் வடிவமைப்புகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழமத்திடம் சமர்பிக்கப்பட்டது. 
 
அதை பரிசீலித்த அதிகாரிகள் அதற்கான ஒப்புதலை வழங்கி விட்டனர். எனவே, ஜெ.வின் நினைவிடம் கட்டும் பணி விரைவில்  தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments