Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
செஸ் உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தோற்றாலும் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று அவர் சென்னை திரும்பினார். 
 
தமிழக அரசின் சார்பில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியவர்களை சந்தித்தார். 
 
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். 
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய பிரக்யானந்தாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments