Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Siva
புதன், 20 மார்ச் 2024 (13:47 IST)
வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.
 
இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறினார். அதில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதில் சொல்லியாக வேண்டும் என  எச்சரிக்கை விடுத்தார்.
 
எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில்  சொல்ல வேண்டியிருக்கும் என்றும், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் இருக்க  வேண்டும் என்றும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கடந்து தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம் என்றும், குறிப்பாக தோழமை கட்சிகளை இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 
திமுக தலைவரின் இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் பொறுப்புடன் பணிபுரிவார்கள் என்றும் தங்கள் மாவட்டத்தில் வாக்குகள் குறைந்தால் தங்கள் பதவிக்கே வேட்டு என்ற நிலை ஏற்படலாம் என்ற அச்சத்துடன் பணிபுரிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தால் 40க்கு 40 நிச்சயம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments