தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளைக் கழகம் போல் செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின் சாடல்

Siva
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (08:22 IST)
சேலத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை தனது கிளைக் கழகமாக மாற்றிவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். "சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றியுள்ளது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
ஜனநாயகத்தின் அடிப்படையே கேலிக்கூத்தாகிவிட்டது என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சிறை தியாகிகள் நினைவாக விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
 
மேலும், தற்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் "அடிமைத்தனம்" குறித்து பேச அவருக்கு என்ன உரிமை உள்ளது என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார். “நமது ஒற்றுமைதான் பலரது கண்ணை உறுத்துகிறது” என்று குறிப்பிட்ட அவர், திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படுவதை வலியுறுத்தினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments